நாளை தொடங்குகிறது ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை தனக்கு ராசியான நம்பரான 9ம் தேதி (நாளை) தொடங்குகிறார்.

மெரீனா கடற்கரைச் சாலையில் உள்ள பெசன்ட் சாலை சந்திப்பில், ஐஸ் ஹவுஸ் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புஅருகே பிற்பகல் 3 மணிக்கு தனது பிரச்சாரத்தை அவர் துவக்குகிறார். மத்திய சென்னை அதிமுக வேட்பாளர்பாலகங்காவுக்கு ஆதரவாக அவரது முதல் பிரச்சாரம் அமையும்.

இதைத் தொடர்ந்து தனது கான்வெண்ட் பள்ளித் தோழியும் தென் சென்னை வேட்பாளருமான பதர் சையதுக்குஆதரவாக சத்யா ஸ்டுடியோ, மத்திய கைலாஷ், கிண்டி ரயில் நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம்ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.

இதையடுத்து செங்கல்பட்டு செல்லும் ஜெயலலிதா அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதுராந்தகம் செல்கிறார்.அங்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் 33வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இதற்காக மதுராந்தகம் தேரடி வீதியில் மாபெரும் பொதுக் கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாமே கூட்டம் கூட்டுவதற்காகலட்சுமண்-சுருதி உள்ளிட்ட பல்வேறு இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் மே மாதம் 8ம் தேதி வரை பல கட்டமாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+