For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத யாத்திரைக்கு எதிராக தெரு நாடகம்: கோவையில் 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

துணைப் பிரதமர் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூரில் தெரு முனை நாடகம்நடத்த முயன்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் சேர்ந்த 3 கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்வானி நாளை மறுதினம் கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக ரதயாத்திரை மேற்கொள்கிறார்.இதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந் நிலையில், கோவை சரவணம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிராக தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரதயாத்திரை மூலம் சிறுபான்மையினர் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்த அத்வானி முயல்வதாகவும், ஏற்கனவேமதரீதியில் பிளவுபட்ட கோவையில் இந்த யாத்திரை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் அவர்கள்பிரச்சாரம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து தெருமுனை நாடகமும் போட முயன்றனர். ஆனால், இவர்களது பிரச்சாரத்தால் பிரச்சனைஏற்படும் என்று கூறி மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X