For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனக் கடலில் தத்தளித்த கும்பகோணம்: இயல்பு நிலைக்கு திரும்புகிறது

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

மகாமகத்துக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படிப்படியாக ஊர்களுக்குத் திரும்புவதால் கும்பகோணத்தில்இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுமார் 20 லட்சம் பக்தர்கள் கும்பகோணத்தில்திரண்டிருந்தனர். இதனால் கும்பகோணம் நகரத்தில் திரும்பிய பக்கமெங்கும் ஜனத்திரள் காட்சியளித்தது.

தீர்த்தவாரி முடிந்ததையடுத்து, பக்தர்கள் கும்பகோணத்தை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாரும் வெளியேறத் துவங்கியுள்ளனர்.

மகாமகத்தையொட்டி நகராட்சி சார்பில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டதால், வரும் ஆண்டுகளில் அடிப்டைவசதிகளுக்காக கும்பகோணம் மக்கள் ஏங்கும் நிலை ஏற்படாது.

ரூ.14 கோடிக்கு குடிநீர் அபிவிருத்தி பணிகளும், ரூ.51.92 லட்சத்தில் வடிகால் மற்றும் சிறுபாலங்களும் கட்டும்பணியும், ரூ.16 கோடிக்கு சாலைப் பணிகளும், ரூ.79.95 லட்சத்துக்கு பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவு மையபராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை புனித நீராடலில் மொத்தம் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். வரும் 10ம் தேதி வரையும்நீராடலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X