புதுவையில் விடுதலை சிறுத்தைகள் போட்டி
சென்னை:
பாண்டிச்சேரி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின்வேட்பாளர், மக்கள் கூட்டணி சார்பில் நிறுத்தப்படுவார்.
நான் சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுபோக மங்களூர் (தனி) தொகுதியிலும் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும். மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வரும் 11ம் தேதி வெளியிடப்படும்.
மக்கள் கூட்டணி சார்பில் சேலத்தில் 14ம் தேதி மாபெரும் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால்சேலம் காவல்துறையினர், முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயணத்தைக் காரணம் காட்டி அனுமதி கொடுக்கமறுக்கின்றனர். எனவே 22ம் தேதிக்கு மாநாட்டை ஒத்திவைத்துள்ளோம்.
மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுலைமான்சேட் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் இந்த மாநாட்டில்கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவித்தார்.