பேனர் தடையை நீக்குக: தேர்தல் ஆணையத்திற்கு ஓவியர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வேட்பாளர்களின் விளம்பர தட்டிகள், விளம்பர பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜே.பி.கிருஷ்ணா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்ததேர்தலின்போது இந்த அளவுக்குக் கடுமையான தடைகள் விதிக்கப்படவில்லை.
பேனர்கள், விளம்பரத் தட்டிகள் ஆகியவை மூலம் எங்களுக்கு பிழைப்பு நடக்கிறது. அதேசமயத்தில் அரசியல்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் நல்ல விளம்பரம் கிடைக்கிறது.
இந்த தடையுத்தரவினால் எங்களது வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே இந்தக் கடுமையான உத்தரவை வாபஸ்பெற வேண்டும் என்று கோரி மத்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்குபேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications