பிரபாகரனை சந்திக்க நிபந்தனை போடும் கருணா
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா, அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைநிபந்தனைகளுடன் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிதித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாவின் செய்தித் தொடர்பாளர் வரதன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதில் கருணாவுக்கு தயக்கம் ஏதுமில்லை. பிரபாகரன் தலைமையின் கீழ் வராமல்எமது பிரிவு தனித்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றால் சந்திப்பதில் பிரச்சனைஏதுமில்லை என்றார்.
புலிகளுக்கிடையே மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காக இலங்கை கத்தோலிக்க பிஷப் கிங்ஸ்லி சுவாமி பிள்ளைஎடுத்து வரும் சமாதான முயற்சியின் விளைவாக இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 15 ஆயிரம் துருப்புகள் உள்ளபுலிகள் இயக்கத்தில் 40 சதவீதப் படை கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாவைச் சந்திப்பது குறித்து புலிகள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இந் நிலையில் நார்வே தூதுக்குழு பிரபாகரனைச் சந்திக்க வன்னிக்குச் செல்கிறது. பிளவு காரணமாக புலிகள்தங்களுக்குள் மோதிக் கொள்ளக்கூடாது என்பதை நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் பிரபாகரனிடம்வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications