For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமாருக்கு முன் ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

சரத்குமார் தனக்கு வழங்கிய காசோலை, சரத்குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாகக் கூறி அவர் மீது ரமேஷ் என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சரத்குமாரைக் கைது செய்ய சைதை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரத்குமார் மனு செய்தார்.

அதில் ரமேஷ் வைத்துள்ள காசோலை மோசடியாக தன்னிடமிருந்து திருடப்பட்டது என்றும் சைதை நீதிமன்றத்தில்முறைகேடான வழியில் பிடிவாரண்ட் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன், 2 வார காலத்திற்கு சரத்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.சரத்குமார் கைது செய்யப்பட்டால் ரூ. 5,000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிதனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X