ஜெயலலிதா ஒரு அரசியல் அரைவேக்காடு: வாசன் தாக்கு
சென்னை& டெல்லி::
ஜெயலலிதா ஒரு அரசியல் அரைவேக்காடு என காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் சோனியா காந்தி இந்தியக் குடிமகள் தான் என்று கூறிவிட்டது. தேர்தலிலும்வென்று அவர் தனக்குள்ள மக்கள் ஆதரவை நிரூபித்துவிட்டார்.
ஆனால், மக்களின் தீர்ப்பையும் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத ஜெயலலிதா தொடர்ந்து சோனியாவைநாலாம்தரமாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கள் மூலம் முதல்வர் நாற்காலியில் அமரவே ஜெயலலிதாதகுதியில்லாதவர் என்பது தெளிவாகிறது.
அரசியல் அரைவேக்காடான ஜெயலலிதாவுக்கு தேசத்திற்காக உழைத்த ராஜிவ் குடும்பம் குறித்துப் பேச என்னஅருகதை இருக்கிறது?. ஜெயலலிதாவின் வாழ்க்கை முறை பற்றி தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தஇந்தியாவுக்கே தெரியும்.
குடும்பப் பாசம் குறித்து ஜெயலலிதாவிடம் யோசனை கேட்க வேண்டிய நிலையில் சோனியா இல்லை. ஊருக்குஉபதேசம் செய்யும் ஜெயலலிதா தன்னை ஒரு முன் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்வது நல்லது.
ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களுக்குக் கூட கருணை காட்டச் சொல்லி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியவர்சோனியா, அவரைப் பற்றி பேசவே ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. அத்வானியுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு சோனியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறார் ஜெயலலிதா.
ராஜிவ் கொலையில் திமுகவுக்குத் தொடர்பில்லை என்று ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை சொல்லிவிட்டது.ஆனால், இடைக்கால அறிக்கையை சுட்டிக் காட்டியே பேசிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிகா.
நீதிமன்றத்திடம் 3 வருட ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு இறுதித் தீர்ப்பில் விடுதலை கிடைத்தது.இடைக்காலத் தீர்ப்புப்படி 3 வருடம் ஜெயிலுக்குப் போக ஜெயலலிதா தயாரா?. இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்குஒரு நீதியா?
வாஜ்பாய், அத்வானியைப் பற்றி ஜெயலலிதா பேசிய கேவலமான பேச்சுக்களை வைத்து ஒரு புத்தகமேபோடலாம். தோல்வி பயத்தில் இருக்கும் ஜெயலலிதா பதவி, பணம், ஆள் பலத்தை வைத்துக் கொண்டுவென்றுவிடலாம் என நினைக்கிறார். அது நடக்காது என்றார் வாசன்.
காங். வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர்பிரபுவும், மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் அய்யரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications