இன்று கோவை வருகிறது அத்வானியின் ரதம்: போககுவரத்து நிறுத்தம்- போலீஸ் பிடியில் நகரம்
கோவை:
கன்னியாகுமரியில் தொடங்கிய துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரை நேற்றிரவு கேரளதுக்குள்நுழைந்தது. இன்று கேரளப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் அவரது ரதம் கோவை நகருக்குள்நுழைகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கி நாகர்கோவில், களியக்காவிளை வழியாக கேரளத்தின் தென் கோடி எல்லையில்உள்ள திருவனந்தபுரத்தில் நுழைந்த அத்வானி, இன்று கோட்டயம், கொல்லம் உள்பட அம் மாநிலத்தின் முழுநீளமும் பயணம் செய்து வட கோடியில் உள்ள பாலக்காடு வழியாக இன்று மாலையில் மீண்டும் தமிழக நகரானகோவைக்குள் நுழைகிறார்.
வாலையாறு வழியாக வரும் அவர் மாலையில் கோவை பீளமேடு வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல்பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானியின் ரத யாத்திரையை முன்னிட்டு, வாலையாறு சோதனைச் சாவடி முதல் வ.உ.சி. மைதானம் வரை பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வ.உ.சி.மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீஸ்மயமாகவே காணப்படுகிறது. மேலும், அத்வானி வரும் பாதையில் உள்ள உயரமான கட்டடங்களில்தொலைநோக்கிகளுடன் ஆயுதம் தாங்கிய போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை வாலையாறுலிருந்து கோவை சாலையில் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அத்வானி இன்றிரவு கோவையிலேயே தங்குகிறார். நாளை காலை கிளம்பி திருப்பூர்,தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறார்.
முன்னதாக இன்று காலை கோட்டயத்தில் நிருபர்களிடம் அவர், மக்களவைத் தேர்தலுக்குப் பின் எங்கள் ஆட்சிமீண்டும் அமையும். அப்போது அயோத்திப் பிரச்சனைக்கு முழு தீர்வு காண்போம் என்றார். பா.ஜ.கவின் தேர்தல்அறிக்கையில் அயோத்தி கோவில் கட்டுவது குறித்து குறிப்பிடப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் நாட்டில் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத் திருத்தம்மற்றும் பசு வதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என எங்களைஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வருகிறது என்றார் அத்வானி.
வாஜ்பாய்க்குப் பதிலாக உங்களை கட்சியில் முன்னிருத்திக் கொள்ளவே இந்த யாத்திரையைமேற்கொண்டுள்ளீர்களா என்று கேட்டபோது, அதை மறுத்த அத்வானி, அடுத்த பிரதமர் வாஜ்பாய்தான் என்றார்.
கேரளத்தில் பிரச்சாரத்தின்போது பேசிய அத்வானி, இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிக படிப்பறிவுகொண்ட மாநிலம். ஆனாலும் வளர்ச்சியில் முடங்கிப் போயுள்ளது. இதற்குக் காரணம் காங்கிரஸ் மற்றும்இடதுசாரிகளின் ஆட்சிதான். இந்த மக்களவைத் தேர்தலில் கேரளத்திலும் தாமரை மலரும் (பா.ஜ.கவின் சின்னம்)என்று நம்புகிறேன்.
எங்கள் கட்சிக்கு அவ்வளவாக வலு இல்லாத தமிழகத்திலும் கேரளத்திலும் எனது யாத்திரைக்கு பெரும் கூட்டம்கூடி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications