சோனியா குறித்த கருத்து: ஜெ. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?
டெல்லி & புவனேஸ்வர்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக முதல்வர் ஜெயலலிதா கருத்துத்தெரிவித்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா சோனியா காந்தி குறித்து கடுமையானகுற்றச்சாட்டுக்களைக் கூறிப் பிரச்சாரம் செய்து வருகிறார். பதி பக்தி, தேச பக்தி இல்லாதவர் சோனியா என்றுகடுமையாகக் கூறியுள்ளார். கணவருக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் சோனியாவை அவர் சாடி வருகிறார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி பேசுகையில்,விரக்தி ஏற்படும்போதெல்லாம் ஜெயலலிதா இப்படித்தான் எதையாவது பேசி வருகிறார். சோனியா குறித்துஜெயலலிதா இப்படிப் பேசுவது முதல் முறையல்ல. இதுதான் அவரது வழக்கம். இதை அப்படியே விட்டுவிடுவதேநல்லது.
இருப்பினும் ஜெயலலிதாவின் பேச்சில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். அப்படிஇருந்தால் தேர்தல் ஆணையத்திடம் நிச்சயம் புகார் கொடுக்கப்படும் என்றார் அம்பிகா சோனி.
ஜெயலலிதா மீதான இந்தப் புகார் குறித்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தின்போது சட்டத்திற்குஉட்பட்டு பேசுவது நல்லது. புகார் கூறப்பட்ட தலைவர்களின் பேச்சில் தேர்தல் நடத்தை விதி மீறல் இருப்பதாகதெரிய வந்தால் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications