For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரமாய் உழைக்கும் திமுகவினர்: கருணாநிதி பெருமிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சீட் கிடைக்காத திமுகவினரும் தொண்டர்களும் மிகத்தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது மனதுக்கு பெரும் மகிழ்ச்சி தருவதாக அக் கட்சியின் தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதுமே திமுகவினர் தீவிரமாக நாடாளுமன்றத்தேர்தல் பணியை ஆற்றி வருகிறார்கள் என்று எனக்குக் கிடைக்கும் செய்தி மனதுக்கு பெரும் மகிழ்ச்சியைத்தருகிறது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்துள்ள திருச்செந்தூர்ஜெயசீலன், கடலூர் ஆதிசங்கர், கிருஷ்ணகிரி வெற்றிச் செல்வன் ஆகியோரும் மும்ரமாக தேர்தல் பணியில்ஈடுபட்டிருப்பதாக அறியும்போது மிகவும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது.

மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட தேர்தல் பிரசார பணிகள் குறித்து விரைவில்விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திமுகவுக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு:

இந் நிலையில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு 10 முஸ்லீம் அமைப்புகளைஉள்ளடக்கிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பின் தலைவரும், காயிதே மில்லத்தின் பேரனுமானதாவூத் மியா கான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ் மாநில காயிதே மில்லத் பேரவை, தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட 10 முஸ்லீம் அமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தக்கூட்டமைப்பு, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டணியின் வெற்றிக்காக எங்களது சமுதாய மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்வோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X