வந்தே மாதரம் பாடிய 54 முஸ்லீம்கள் மத நீக்கம்!!
ஆக்ரா:
வந்தே மாதரம் பாடிய 54 முஸ்லீம்கள் மதத்துக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி மத நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவுக்கு அருகில் உள்ள லோகா மண்டி, ஸகீத்நகர் ஆகிய கிராமங்களில் இச்சம்பவம் நடந்தது. இந்த கிராமங்களின் மசூதிகளைச் சேர்ந்த இரு முத்தவல்லிகள் (மத போதகர்கள்) உள்ளிட்ட 54முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதற்காக அவர்களை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்குவதாக உள்ளூர்முஸ்லீம் மதகுரு அப்துல் ருத்தூஸ் ருமி அறிவித்துள்ளார்.
மேலும் முஸ்லீம் பெண்களுடன் அவர்கள் செய்து கொண்ட திருமணங்களும் செல்லாது என்று அறிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடல் நம்மை இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வழி தவறச் செய்வதாகும். அதை முஸ்லீம்கள்பாடுவது தவறாகும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந் நிலையில் மத நீக்கம் செய்யப்பட்டவர்களில் 13பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க. கண்டனம்
முஸ்லீம் மதகுருவின் இந்தச் செயலுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்செய்தித் தொடர்பாளர் விஜய்குமார் மல்ஹோத்ரா கூறுகையில், வந்தே மாதரம் பாடல் வழிபாட்டுப் பாடல் அல்ல.தாய் நாட்டை வாழ்த்திப் பாடும் பாடல் ஆகும். இந்த நடவடிக்கை மோசமானதாகும் என்றார்.