ஜெவுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்குகிறார் பழ.நெடுமாறன்
ராமநாதபுரம்:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சென்னை உயர் நீதிமன்றம்அனுமதி வழங்கியுள்ளது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பாவாணன்மற்றும் டாக்டர் தாயப்பன் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தங்களை அனுமதிக்கக் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், பழ. நெடுமாறன் உள்ளிட்டமனுதாரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். இருப்பினும் தங்களது வழக்கு குறித்தும், பொடா சட்டம்குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் பேசக் கூடாது. தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை தொடர்ந்து பிரச்சாரத்தில்ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது.
பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளிக்கவும், பொதுக்கூட்டத்தில் பேசவும் தற்போது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளஜாமீன் நிபந்தனைகள் தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை அமலில் இருக்காது. பிரச்சாரம் முடிவடைந்த அடுத்த நாள்முதல் தற்போதுள்ள ஜாமீன் நிபந்தனைகள் மீண்டும் அமலுக்கு வரும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நெடுமாறன் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை நீங்கியுள்ளது. திமுக, மதிமுக,பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications