முடிவெடுத்து விட்டார் ரஜினி!
கோவை:
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் முக்கிய முடிவை எடுத்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்கள்முன்பு இது தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்த்தே வெளியிடுவார் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயணா கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதை விரைவில்ரஜினியே அறிவிப்பார். இது தொடர்பாக முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களுக்குமுன்பு அவர் தனது முடிவை வெளியிடுவார்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ரசிகர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறேன். தற்போதுமுதல் கட்ட ஆலோசனை முடிந்துள்ளது என்றார் சத்தியநிாராயணா.
இதற்கிடையே பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாகசெயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினியே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் குறிப்பாகவன்னியர்களின் கோட்டை என்று கருதப்படும் தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications