ராமநாதபுரம்: "தண்ணி இல்லா காட்டில்" கன மழை!
ராமநாதபுரம்:
குடிநீர்ப் பஞ்சத்தால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்திடீர் கன மழை பெய்தது.
தண்ணி இல்லாக் காடு என்று மக்களால் "அன்புடன்" அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலானபகுதிகளில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 5 வரை விற்கப்படுகிறது. மழையும்இல்லாததால், விவசாயப் பணிகளும், பாதிக்கப்பட்டு விவசாயிகள் முதல் சாதாரண பொது ஜனம் வரை மிகவும்பாதிப்பில் ஆழ்ந்திருந்தனர்.
கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சும்மாவே வாடிக் கிடக்கும் ராமநாதபுரம் தண்ணீர்ப் பிரச்சினையில்சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
இந் நிலையில் திடீர் கன மழை பெய்து ராமநாதபுரம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. தொண்டி, கீழக்கரை,திருப்புல்லாணி, நைனார் கோவில், ராமநாதபுரம், ராமேஸ்வரம், தேவிப்பட்டனம் ஆகிய இடங்களில் சுமார்ஒன்றரை மணி நேரம் இந்த கன மழை பெய்தது.
இந்த கன மழையினால் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்து குடிநீர்ப் பிரச்சனை தீரும் என்று மக்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். மேலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளதால் ராமநாதபுரம் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.