அதிமுகவினர் வன்முறையில் இறங்கினால் கையை உடைப்போம்: வைகோ
திருச்சி:
தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினால் கைகளை உடைக்கவும் தயங்க மாட்டோம் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் எல்.கணேசனுக்கு ஆதரவாக வைகோ பேசியதாவது:ட
இங்கே கடல் போல திரண்டுள்ளீர்கள். மொழி காக்க நடந்த போரில் லட்சக்கணக்கான இளைஞர்களை முன் நிறுத்திபோராட்டம் நடத்திய எல்.கணேசன் தான் இந்தத் தொகுதியில் எங்கள் வேட்பாளர். அவருக்கு வாக்களித்துதமிழகத்தில் நாசகர ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
ஜெயலலிதாவின் கூட்டணியில் மதிமுக இருந்த காலம் இருண்ட காலம். கேடுகெட்ட காலம். ஒரு தொகுதிக்கு ரூ. 10கோடி செலவழிக்கப் போகிறார்களாம் அதிமுகவினர். போலீஸ் பட்டாளத்தை வைத்து அடக்குவார்களாம். வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவார்களாம். அதிமுகவினர் அமைச்சர்கள் தலைமையில் திட்டம் போடுகிறார்கள்.
வன்முறையில் ஈடுபடும் கைகளை உடைக்கவும் தயங்க மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications