3 நிமிடங்கள், 688 மிளகாய்கள்; கடலூர் இளைஞரின் காரமான சாதனை!
கடலூர்:
3 நிமிடங்களில 688 மிளகாய்களை கடித்து, சுவைத்துச் சாப்பிட்டு காரமான சாதனை படைத்திருக்கிறார் அர்ஜூனன்இளையராஜா என்ற இளைஞர்.
அர்ஜூன் இளையராஜா. 25 வயதாகும் இவர் கடலூர் அருகே உள்ள தியாகவள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.சாதனை படைப்பதில் அதிக தாகம் கொண்டவர். பச்சை மிளகாய்களை எக்கச்சக்கமாக கடித்துத் தின்று உலகசாதனை படைக்க அவர் விரும்பினார்.
இதையடுத்து கடலூரில் உள்ள புனித ஆனி மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் தனது சாதனையைநிகழ்த்தினார். திரளாகக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பச்சை மிளகாய்களுடன் ஹாயாக அமர்ந்த அவர்,கடகடவென்று எடுத்துக் கடித்து சாப்பிட ஆரம்பித்தார்.
3 நிமிடங்கள் முடிந்திருந்தபோது, 688 மிளகாய்களை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டார் இளையராஜா. கடும்காரணம் காரணமாக கண்களில் தண்ணீர் கொட்ட, இளையராஜா நிமிர்ந்தபோது கூட்டத்தினர் கைகளைத் தட்டிஅவரை உற்சாகப்படுத்தினர்.
ஆனால், 688 மிளகாய்களைத் தின்றாலும் கூட உலக சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்இளையராஜா. காரணம், இதற்கு முன்பு 2 நிமிடங்களில் 500 மிளகாய்களைத் தின்று அர்மான்டோ மர்டில்லியானாஎன்பவர் நிகழ்த்தியதே உலக சாதனையாக உள்ளது.












Click it and Unblock the Notifications