மதுரை உயர் நீதிமன்ற கிளையை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை தொடங்கப்படவுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி முதல் மதுரை கிளைஇயங்கவுள்ளது. இந் நிலையில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை எதிர்த்து சுரேஷ் குமார் என்ற வழக்கறிஞர்உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,அதைத் தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றக் கிளையை தொடங்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதைஎதிர்க்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு 2 பதிவாளர்களை நியமித்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஉத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி பெரிய கருப்பையா, சேலம் மாவட்ட முதன்மை செஷன்ஸ்நீதிபதி பழனிவேலு ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதிவாளர்கள் ஆவர்.