திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தை காலி செய்ய நீதிபதி அதிரடி உத்தரவு
திருச்சி:
திருச்சியில் 114 ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கறிஞர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தை 2 நாட்களில் காலிசெய்யுமாறு திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தாயாரம்மாள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சியில் மாவட்ட நீதிமன்றம், துணை நீதிமன்றங்கள் இயங்கி வரும் நீதிமன்ற வளாகத்தில் பெரும் இடநெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து போதிய இட வசதி கோரி வழக்கறிஞர்கள் கடந்த 4ம் தேதி மரத்தடியில்அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மாவட்ட நீதிமன்றம் காவல்துறையிடம் புகார் கொடுத்தது. இதைத் தொடர்ந்து 25 வழக்கறிஞர்கள் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை இன்னும் 2 நாட்களில் காலி செய்ய வேண்டும்என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தாயாரம்மாள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால்வழக்கறிஞர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 114 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்தை 2 நாட்களில் காலிசெய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தருவதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.மேலும் இங்குள்ள ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சட்டப் புத்தகங்களை எங்கு கொண்டு செல்வது என்றும் அவர்கள்குழம்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications