தெலுங்கான தனி மாநில கோரிக்கைக்கு வைகோ ஆதரவு
சென்னை:
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கான பிரதேசத்தை தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
தெலுங்கான பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்காகதெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தலில்இக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்து திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறுகேட்டுக் கொண்டார்.
ஆனால், இது அடுத்த மாநில பிரச்சினை என்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கருணாநிதிகூறிவிட்டார்.
கருணாநிதியை சந்தித்த பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.அப்போது தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு மதிமுக முழு ஆதரவு தரும் என ராவிடம் வைகோஉறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications