தேர்தல் பிரச்சாரம்: தமிழகம் வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் வாஜ்பாய், அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழகத்திற்கு வருவார் எனதமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் தேர்தல் பிரசாரத்திற்காகதமிழகம் வரவுள்ளார். எந்தெந்த ஊர்களில் அவர் பிரசாரம் செய்வார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தமிழக வேட்பாளர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்கு மேல் வேட்பாளர் பட்டியல்வெளியிடப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாகவும், மோசமாகவும்விமர்சித்துள்ளார். இதனால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில்புகார் செய்யவுள்ளோம்.
அத்வானியின் ரத யாத்திரை நடந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்றார்கள். ஆனால் குமரியில் தொடங்கியயாத்திரை மிகவும் அமைதியா மக்கள் ஆதரவுடனும் நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications