திமுக, அதிமுக மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது கூறப்பட்டிருக்கும் புகார்களைத் தேர்தல் ஆணையம்விசாரிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

அதிமுக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிவிமர்சனங்கள் கூறப்பட்டுள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அதிமுக தேர்தல் அறிக்கையின் நகலைக்கேட்டுள்ளோம்.

அதே போல் வாக்காளர்களுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸ், தட்டு பரிசளித்ததாக திமுக மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்விரு விஷயங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நிச்சயம்நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான முறையில் தேர்தலைநடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைநீக்கும் பொருட்டு ஒரு ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தேர்தலை பண பலமும், படை பலமும் ஆட்டிப் படைக்கிறது. யாராக இருந்தாலும்தேர்தல் நடத்தை விதிமுறை மீறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+