திமுக-மதிமுக கூட்டணி தீவிரவாத கூட்டணி: ஜெயலலிதா
வேலூர்:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான திமுக-மதிமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கவும், தீவிரவாதத்தை ஒடுக்கவும்அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோஅடைக்கப்பட்டிருந்த சிறை அமைந்துள்ள வேலூரில் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:
பிரிவினைவாத சக்திகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவான கூட்டணி தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. அதில் இடம்பெற்றதன் மூலம் ராஜிவ் காந்திக்கே துரோகம் செய்துவிட்டார் சோனியா காந்தி.
ஏழைகளுக்கு உழைக்கும் அரசு தான் உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய அரசு. விவசாயிகளுக்கும், குடிசைவாழ்மக்களுக்கும் எண்ணற்ற நலன்களைச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.
30 வருடத்தில் தமிழகம் அடையாத வளர்ச்சியை கடந்த மூன்றே ஆண்டுகளில் நடத்திக் காட்டியிருக்கிறோம்.
வளமான தமிழகம் உருவாகவும், மத்தியில் பலமான அரசு அமையவும் வாஜ்பாய் பிரதமராக வேண்டும். இதற்கு அதிமுகவுக்குமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.