For Daily Alerts
Just In
பிட் அடித்து பிடிபட்ட 41 பிளஸ் டூ மாணவர்கள்
வேலூர்:
பிளஸ் டூ தேர்வுகளின்போது பிட் அடித்தது, காப்பி அடித்தது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக இதுவரை 41 மாணவர்கள்பிடிபட்டுள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் தான் பிட் மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதுவரை தமிழ் (இரண்டு தாள்கள்), ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 3 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பறக்கும்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின்போது பிட் அடித்தது தொடர்பாக 41 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழ் தேர்வுக்கும் மாணவர்கள் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளது வேடிக்கையான விஷயம். அதிகபட்சமாக கடலூரில்தான் 15மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். 9 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, March 13, 2004, 5:30 [IST]