கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு தேர்தல் கமிஷன் திடீர் தடை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வர்னணையையும், தேர்தல்பிரசாரத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துவிட்டது.
இதனால் அவர் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் முடியும் வரை பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது பாகிஸ்தானில் தொடங்கியுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட்போட்டிகளை டிவியில் நேரடி வர்னணை செய்யவுள்ளார் ஸ்ரீகாந்த். அத்தோடு அவ்வப்போது பிரசாரத்திலும் ஈடுபட அவர் முடிவுசெய்திருந்தார்.
ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும்என்று ஆணையம் கண்டிப்பாக கூறி விட்டது.
இதனால் நிறைய காசும், விளம்பரமும் கிடைக்கும் கிரிக்கெட் கமென்டரியை மட்டும் செய்ய ஸ்ரீகாந்த் முடிவு செய்துள்ளார்.பாகிஸ்தான் தொடர் முடியும் வரை பிரசாரம் செய்வதில்லை என்றும் அவர் முடிவெடுத்துள்ளார்.