விந்தியா விவகாரம்: ஓசூர் தொழிலதிபர் ஜாமீனில் விடுதலை
கிருஷ்ணகிரி:
நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டிருந்த ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜை ஜாமீனில் விடுதலைசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி ஓசூர் சென்ற நடிகை விந்தியா அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது கமல்ராஜ் என்றதொழிலதிபர் விந்தியாவின் அறைக்குள் புகுந்து அவரைக் கற்பழிக்க முயன்றதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கமல்ராஜ், அவரது நண்பர் சம்பத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தன்னை ஜாமீனில் விடுதலைசெய்யக் கோரி கமல்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார், கமல்ராஜை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தினமும் 2 முறை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
இதற்கிடையே கற்பழிப்பு முயற்சி என்று சொல்வதே தவறு என்றும், கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏற்பட்ட மோதலேகற்பழிப்பு முயற்சி என்று திசை திருப்பப்படுவதாகவும் சொல்கிறார்கள்.