அத்வானி ரத யாத்திரையால் பா.ஜ.க. அலை வீசுகிறது: இல.கணேசன்
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி தமிழகத்தில் 3 நாட்கள் மேற்கொண்ட ரத யாத்திரைக்குப் பிறகு தமிழகத்தில் பா.ஜ.க.ஆதரவு அலை அதிகரித்துள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரைதமிழகத்தில் நடந்த 3 நாட்களில் கட்சிக்கு ஆதரவான அலை அதிகரித்துள்ளது. மக்கள் மனதில் பெரும் மாற்றம்ஏற்பட்டுள்ளது.
சங் பரிவார் அமைப்புகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறுவது ஏமாற்று வேலை. நான்கரை ஆண்டு காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது திடீரென்று சங் பரிவார் அமைப்புகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நடத்துகிறது என்றுஅவர் கண்டுபிடித்துள்ளதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
திமுகவிலிருந்து ஆலடி அருணாவைப் போல பலரும் வெளியேறத் துடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும்வெளியேற வேண்டும். ஆலடி அருணாவின் சேவையை பா.ஜ.க. பிரச்சாரத்தின்போது பயன்படுத்திக் கொள்ளும்என்றார் அவர்.