முன்னாள் திமுக அமைச்சரின் மோட்டார் சைக்கிள் "ஸ்டண்ட்"!
கடலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்துவருகிறார்.
தேர்தல் வந்து விட்டாலே அரசியல்வாதிகள் அடிக்கும் ஸ்டண்ட்களை தாங்க முடியாது. சேறும், சகதியுமாக உள்ளபகுதிகளில் வெறும் காலில் நடந்து போவார்கள், குடிசைக்குள் குனிந்து சென்று தொட்டு நலம் விசாரிப்பார்கள்,கூழ் சாப்பிடுவார்கள், மண் தரையில் அமர்ந்து தொண்டர்களோடு பேசுவார்கள், இன்னும் என்ன்ெனவோசெய்வார்கள். தேர்தலுக்குப் பின் அவர்களைப் பார்க்க பங்களா, பங்களாவாக அலைய வேண்டும்.
அந்த வரிசையில், கடலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வெங்கடபதிக்கு ஆதரவாக முன்னாள் திமுகஅமைச்சரும், குறிஞ்சிப்பாடி திமுக எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் சென்றுவாக்கு சேகரித்து வருகிறார்.
தினசரி பல்வேறு கிராமங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ சென்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications