கோவில், பள்ளி வாசல்களில் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவில் மற்றும் பள்ளி வாசல்களில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவில், சர்ச், பள்ளிவாசல்கள், குருத்துவராக்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. அரசுக்குச் சொந்தமானமின்கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் மீது விளம்பர தட்டிகள் கட்டவோ, கொடிகள், தோரணங்கள் கட்டவோகூடாது.

மற்ற கட்சியினரை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மட்டுமே விமர்சிக்கவேண்டும். தனிநபர் விமர்சனங்களோ பொதுவாழ்க்கைக்குத் தொடர்பில்லாத செயல்பாடுகளையோ விமர்சிக்கக்கூடாது. ஊர்வலத்தின்போது கொடும்பாவி கொண்டு செல்வதோ, எரிப்பதோ கூடாது.

தேர்தல் முழுவதும் வேட்பாளர் ஒரே காரையே பயன்படுத்த வேண்டும். முக்கிய தலைவர்களின் வருகையின்போதுபோடப்படும் மரத்தாலான தடுப்புச் சுவர் அமைக்கும் செலவை அரசியல் கட்சிகளே ஏற்க வேண்டும்.

பொதுக்கூட்டம் நடத்தும்போது உரிய அனுமதியை போலீஸாரிடம் முன்கூட்டியே பெற வேண்டும். பொதுக்கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நேரடியாக யாரும் மேற்கொள்ளக்கூடாது. பல்வேறு சாதி, மதத்தினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+