இன்று கிருஷ்ணகிரியில் ஜெ. பிரசாரம்
கிருஷ்ணகிரி:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
கடந்த9ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா தற்போது வட மாவட்டங்களில் பிரச்சாரம்மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளுக்குட்பட்ட ஊர்களில்பிரச்சாரம் செய்கிறார்.
சின்னகோளாறுப்பட்டி, பாச்சல், செங்கம், பக்கிப்பாளையம், பேராம்பட்டி, காளிகாபுரம், வெங்காபுரம் வழியாகஅவர் திருப்பத்தூரை அடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி தொகுதிக்கு வருகிறார். மல்லப்பாடி, பர்கூர், காந்திகுப்பம் வழியாககாவேரிப்பட்டணம் வரும் ஜெயலலிதா காவேரிப்பட்டணத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர்கிருஷ்ணகிரி வந்து இரவு தங்குகிறார்.
நாளை தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா தர்மபுரியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.அங்கு பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்கிறார் (இங்கு இன்னும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்றுதெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
திங்கள்கிழமை இரவு சேலம் செல்லும் முதல்வர் அங்கு பொதுக் கூட்டத்தில் பேசி அதிமுக வேட்பாளர்ராஜசேகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications