ராஜீவை புலிகள் கொலை செய்தது பெரிய தவறு: கருணா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மிகப் பெரிய தவறாகும் என்றுபுலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா கூறியுள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

இந்திய அமைதிப் படை மீது தாக்குதல் நடத்தி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து விட்டோம். அதன் பிறகுராஜீவ் காந்தியைக் கொல்ல அவசியம் இல்லை. புலிகளின் உளவுப் படை செய்த மிகப் பெரிய தவறு ராஜீவ்படுகொலையாகும். இதனால் எங்கள் இயக்கத்துக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.

என்னை ஒதுக்கிவிட்டு விடுதலைப் புலிகளால் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டாலும் அது வலுவானதாகஇருக்காது. ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியே ஆக வேண்டும் என்றுகூறினார்.

தமிழ்ச்செல்வன் பேட்டி:

இதற்கிடையே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளர்களுக்குஅளித்த பேட்டியில், கருணாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு இன்னும் அப்படியே உள்ளது. அவர்அதை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விடாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிலைமையைக்கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+