மாணவர்களை இழுக்கிறார் சு.சுவாமி
மதுரை:
மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று பொருளாதாரம் குறித்த போதனைகளை மேற்கொள்வதன்மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜனதாக் கட்சி சார்பில் மதுரையில் சுயேச்சையாகப்போட்டியிடும் சுப்பிரமணியம் சுவாமி.
மதுரை தொகுதியில் சு.சுவாமி தனித்துப் போட்டியிடுகிறார். அவரது பிரச்சாரம் வித்தியாசமான முறையில் தொடங்கிவிட்டது. பெரிய கட்சிகளைப் போல ஆரவாரம், ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாகபிரச்சாரம் செய்து வருகிறார் சுவாமி.
அத்தோடு, பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பொருளாதாரம் குறித்து பாடம் எடுக்கிறார்.ஆனால் அதில் அவர் அரசியலைக் கலக்கவில்லை. இருந்தாலும், மாணவர்கள் சுவாமியின் உரைகளை மிகவும்ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். சுவாமிக்கு மாணவர்களிடையே நல்ல மரியாதை இருப்பது பெரிய பெரியகட்சிகளைக் கூட பயமுறுத்தி வருகிறது.
மாணவர்களின் வாக்குகள் சுவாமிக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நிலை உள்ளது. இருப்பினும்,சுவாமியின் உரைகளில் அரசியல் அத்துமீறல் எதுவும் இருப்பதில்லை என்று கல்லூரி ஆசிரியர்கள்திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
மதுரையில், எதுவும் நடக்கலாம்!












Click it and Unblock the Notifications