சுய உதவிக் குழு மூலம் அதிமுக பிரச்சாரம்: கருணாநிதி புகார்
சென்னை:
சுய உதவிக் குழுக்களையும் அதிமுக பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
முரசொலி நாளிதழில் அவர் இது குறித்து எழுதியுள்ளதாவது: சுய உதவிக் குழுக்களை ஆளுங்கட்சியினர்அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்குஏராளமான கடன் உதவிகளை வழங்குவது, சேலைகளை வழங்குவது ஆகியவை கடுமையான விதி மீறலாகும்.
அதிமுகவுக்கு ஆதரவு அளித்தால், ஓட்டுப் போட்டால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்றும் சுய உதவிக்குழுக்களுக்கு அதிமுக உறுதியளிக்கிறது.
அதிமுக அரசின் இந்த அப்பட்டமான விதி மீறலை தேர்தல் ஆணையம் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரல்களை வெட்டிக்கொள்கிறார்கள். இதைப் பார்த்தால், தமிழகத்தில் காவல்துறை எந்த அளவுக்கு ஆளுங்கட்சி மயமாக உள்ளதுஎன்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications