இலங்கை: அமைதி பேச்சை முன்னிறுத்தி ரணில் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலைத்ததையடுத்து, அடுத்த மாதம் 2ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர மீண்டும் தனது தலைமையில் அரசு அமைக்கமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ரணில் பிரச்சாரம் செய்து வருகிறாார்.பிரசாரத்தில் இடையே இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

கடந்த நான்காண்டுகளில் மக்கள் சந்திக்கும் 3வது தேர்தல் இதுவாகும். நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம்மக்கள் மீது தேர்தலை திணித்தது சந்திரிகாதான். புலிகளுடான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வது குறித்தும்,பொருளாதார மேம்பாடும் தான் என் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெறும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதில் எங்களது கட்சி ஆர்வமாக உள்ளது. அதற்குஅவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அதற்கானமுயற்சிகளைத் தொடர்வோம்.

-1.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி எங்களது ஆட்சியில் 8 சதவீதமாக உயர்ந்தது. இப்போது தேர்தல்திணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பொருளாதாராத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மைபலத்துடன் வெற்றி பெறுவதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தையையும், பொருளாதார வளர்ச்சிக்கானபணிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார்.

இதற்கிடையே சந்திரிகா, தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் புலிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும்தொடர்வேன் என்றும், ஆனால் பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகளை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+