சன் டிவியில் இருட்டடிப்பு செய்யப்படும் வைகோ
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நிகழ்ச்சிகளை சன் டிவி இருட்டடிப்பு செய்து வருவதால் அக் கட்சியின்தொண்டர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.
பொடாவில் அவர் சிறையில் இருந்தவரை, நீதிமன்றத்துக்கு வந்து சென்றதையெல்லாம் ஒளிபரப்பி வந்த சன் டிவி,அவர் விடுதலையான தினத்திலிருந்து இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டது.
திமுக விருதுநகர் மாநாட்டில் வைகோ பேசியது, வைகோ நடத்தி வரும் பொதுக் கூட்டங்கள், கலிங்கப்பட்டியில்அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு என அனைத்தையும் சன் டிவி சென்சார் செய்துவிட்டது.
இதனால் மதிமுக தொண்டர்களிடையே கோபமும் எரிச்சலும் நிலவுகிறது. அதிமுகவுக்கு ஜெயா டிவி, திமுகவுக்கு சன்டிவி, பா.ம.கவுக்கு விண் டிவி என்று இருப்பது போல மதிமுகவும் ஒரு டிவியைத் தொடங்க வேண்டும் எனவைகோவை தொண்டர்கள் நச்சரித்து வருகின்றனர்.
இதற்கான வேலைகளை வைகோ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் கோயம்புத்தூர், கரூர். ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மதிமுகவினர்சார்பில் இன்று வைகோவிடம் ரூ. 1 கோடி தேர்தல் நிதியளிக்கப்படுகிறது. இதற்கான விழா உடுமலைப்பேட்டையில்நடக்கிறது.