வாக்காளர் பட்டியலில் திமுக எம்.பி. பெயர் நீக்கம்!!
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் அதிமுக அரசு மாபெரும் முறைகேடுகள் செய்திருப்பதால், 40 தொகுதிகளிலும்அந்தப் பட்டியலை திமுக தொண்டர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கழகச் செயலாளர்களிடம் தேர்தல் கமிஷன்அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பட்டியலை சரிபார்த்தபோது, துறைமுகம் தொகுதியில் 29வது வட்டம்கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் 4ம் எண்ணுள்ள வீட்டில் 277 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
விசாரித்தபோது அந்த வீட்டில் 6 வாக்காளர்கள்தான் இருப்பது தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது 28ம் எண் வீடு வரை உள்ள வாக்காளர்கள் 4ம் எண் வீட்டில் தவறுதலாகசேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அதேபோல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் 3வது வட்டம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள ஒரு குடிசைவீட்டில் 410 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகசுந்தரத்தின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்துநீக்கியிருக்கிறார்கள். ஆனால் அவரது மனைவி பெயர் மட்டும் உள்ளது. தன் பெயரை பட்டியலில் சேர்க்குமாறுசண்முகசுந்தரம் தற்போது மனு கொடுத்துள்ளார்.
இதுபோல் பல இடங்களில் தி.மு. கழக உறுப்பினர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. எனவே கழகஉடன்பிறப்புகள் வாக்காளர் பட்டியலை 40 தொகுதிகளிலும் சரிபார்க்கும் பணியில் முழுக்கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications