சென்னையில் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன்நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்துள்ளார்.இன்று ஆளுநர் மாளிகையில், இந்த ஆலோசனை நடந்தது.
இதில், தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி, தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர்சையத் முனீர் ஹோதா, டிஜிபி கோவிந்த், சென்னை மாநகர ஆணையர் நடராஜ், நாடாளுமன்றத் தேர்தல் ஐ.ஜி.விபாகர் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிப்பது,நடத்தை விதி மீறல் புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications