சென்னை கடற்கரையில் 9 மாடிக் கட்டடம்: தடை விதிக்கக் கோரிக்கை
சென்னை:
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், கடற்கரை ஓரமாக கட்டப்பட்டு வரும் 9 மாடிக் குடியிருப்புக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று 9 மாடி குடியிருப்புகளை (ஃபிளாட்டுகள்) கட்டி வருகிறது. இதுவரை 6மாடிகள் வரை கட்டப்பட்டு விட்டன.
இந்தக் கட்டடம் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்படுவதாக கூறி ராஜேஷ் பாண்டே என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தக் கட்டடத்திற்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.டி.ஏ.) முறைகேடானவழியில் அனுமதி வழங்கியுள்ளது. கடற்கரைச் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் கடற்கரையோரமாககட்டப்பட்டு வரும் இந்தக் கட்டடம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை.
எனவே இந்தக் கட்டடத்தைக் கட்ட தடை விதிக்க வேண்டும், இதுவரை கட்டப்பட்ட 6 மாடிகளையும் இடிக்கஉத்தரவிடவேண்டும் என்று கோரியுளளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறுஎம்.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, மத்திய சுற்றுச் சூழல்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications