நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஜெயலலிதாவை திருத்த முடியாது: இளங்கோவன்
சென்னை:
நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ, அதே போல ஜெயலலிதாயும் திருத்தவே முடியாது என்று காங்கிரஸ்கட்சியின் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லி சென்று அங்கு கட்சி மேலிடத்தால் அப்செட் ஆக்கப்பட்ட பின்னர் இன்றுசென்னை திரும்பினார் வாசன். அவருடன் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்புரமணியமும், காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவனும் வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். காங்கிரஸிலிருந்து விலகுமாறும்வாசனைப் பார்த்து அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய வாசன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் கட்சி மேலிடத்தில் தெளிவாககூறியுள்ளோம்.
வேட்பாளர்கள் தொடர்பாக நானும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் எங்களது கருத்துக்களை ஆணித்தரமாகதெரிவித்விட்டோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் சென்ற வாசன் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..












Click it and Unblock the Notifications