For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் விபத்து: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உயிர் தப்பினர்

By Staff
Google Oneindia Tamil News

சூரத்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரச்சாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் பிருதிவிராஜ்செளகான், குமாரி சைலஜா, அகமது படேல் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக

சோனியா காந்தி இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரப் பயணமாக குஜராத் மாநிலம் சூரத் வந்தார். சூரத் அருகேயுள்ளகன்வெல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

சோனியா வந்து சேர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பிருதிவிராஜ் செளகான், குமாரிசைலஜா, அகமது படேல் ஆகியோர் டில்லியில் உள்ள ஏஸ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானமற்றொருஹெலிகாப்டரில் வந்தனர்.

சோனியா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய அதே இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வந்த ஹெலிகாப்டரும்தரையிறங்கியது. அப்போது, ஹெலிகாப்டரின் வால்பகுதி உடைந்து நொறுங்கியது.

இதில் குமாரி சைலஜா, அகமது படேல் ஆகியோருக்கு எந்த காயமும் இல்லை. அதேநேரத்தில், பிருதிவிராஜ்செளகான், ஹெலிகாப்டரின் பைலட் மற்றும் துணை பைலட் காயம் அடைந்தனர்.

செளகானும், காயம் அடைந்த பைலட்களும் சூரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X