ராஜகோபால் என்னை கொடுமைப்படுத்தினார்: ஜீவஜோதி
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தன்னை அடியாட்களை வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைசெய்ததாக ஜீவஜோதி நீதிமன்றத்தில் கூறினார்.
ஜீவஜோதி கடத்தல் வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளாக நேற்றும்ஜீவஜோதியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது ராஜகோபாலிடம் பணம் எதையும் வாங்க நான்விரும்பவில்லை. இந் நிலையில் நான் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுவேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக அவரே பணத்தைக் கட்டினார்.
ராஜகோபால் கொடுத்த பணத்தை நான் விருப்பப்பட்டு வாங்கவில்லை. ராஜகோபால் பணம் கொடுத்தவிவகாரத்தை நான் எனது புகாரிலும் கூறியுள்ளேன்.
என்னையும், எனது கணவர் சாந்தக்குமாரையும் வேளச்சேரியிலிருந்து அசோக் நகரில் உள்ள தனதுஹோட்டலுக்கு அடியாட்களை வைத்துக் கடத்திச் சென்று எங்கள் இருவரையும் ராஜகோபால் சித்திரவதை செய்தார்என்றார் ஜீவஜோதி.












Click it and Unblock the Notifications