காதி கிராம ஊழியர்கள் டிஸ்மிஸ்க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
தமிழக காதி கிராம ஊழியர்கள் 862 பேரை டிஸ்மிஸ் செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது பணியில் சேர்க்கப்பட்ட 842 காதி கிராம தொழில் வாரிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டிஇவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 12ம் தேதி 97 பேர் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர்.
இந் நிலையில், தங்களை அரசு பதவி நீக்கம் செய்வதை எதிர்த்தும், முறைப்படி வேலைவாய்ப்பகம் மூலம் பணியில்சேர்ந்த தங்களை பதவி நீக்கம் செய்வதைத் தடுக்கக் கோரியும் 40 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தமிழக அரசின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு வரும் 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) வரை இடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications