மெரீனா பீச்சில் பிரச்சாரம் தொடங்க கருணாநிதிக்கு போலீஸ் அனுமதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் தொடங்கிய அதே இடத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல்பிரச்சாரத்தைத் தொடங்க போலீஸார் அனுமதியளித்துள்ளனர்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த செயல்வீரர் கூட்டத்தில் இது தொடர்பாகதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசியதாவது:
கடற்கரை சாலையில் மேடை போட்டு, ஒலிப்பெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மெரீனா பீச் சாலையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதனையடுத்து ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிய அதே இடத்தில் தானும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாக கருணாநிதி அறிவித்தார். அதற்கான அனுமதியைப் பெற திமுக மாவட்ட செயலாளர் துணை கமிஷனர்அலுவலகத்துக்குச் சென்றார்.
கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த துணைக் கமிஷ்னர் சண்முக ராஜேஸ்வரன் அங்கு இருந்தார்.கடற்கரையில் எங்கு வேண்டுமானாலும் மேடை போடவும், ஒலிப்பெருக்கிகளைக் கட்டவும்அனுமதியளித்திருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
முன்னதாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கடற்கரையில் கூட்டம் நடத்தவே அதிமுகஅரசுதான் தடை போட்டது. ஆனால் ஜெயலலிதா கடற்கரையில்தான் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்குஅனுமதி தந்ததன் மூலம் கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று போலீஸார் அச்சாரம் போட்டுள்ளனர். இதனால்நானும் கடற்கரையிலிருந்து தான் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறேன்.
போலீஸார் ‘நீதிமான்கள்’ என்பதால் எனக்கும் அனுமதி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கருணாநிதிகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுத்தால் தேர்தல் நேரத்தில் கருணாநிதி இதை பிரச்சனையாக்குவார்என்பதால் வேறு வழியின்றி போலீஸாரும், அரசும் பணிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications