கருணா விலகலுக்கு அமெரிக்காவே காரணம்: புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டதற்கு அமெரிக்காவே காரணம் என்று விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை அமெரிக்கா மறுத்துள்ளது.
கிழக்குப் பகுதியில் தனித்து இயங்கப் போவதாக தளபதி கருணா அறிவித்ததையடுத்து அவர் விடுதலைப் புலிகள்இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். கிழக்குப் பகுதியின் புதிய பொறுப்பாளராக கரிகாலன் நியமிக்கப்பட்டார்.யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு கரிகாலன் பேசியதாவது:
கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்ததற்கு அமெரிக்காவின் பின்னணியும், கருணாவின்சுயநலமும் காரணம். கருணாவை தனது பிரதிநிதியாக இயக்கத் தலைவர் பிரபாகரன் பல முறை வெளிநாடுகளுக்குஅனுப்பி வைத்துள்ளார். அப்போது வெளிநாட்டு சக்திகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானம் ஏற்பட்டு விடக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு கருணாவைஅமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. இலங்கை ராணுவ அதிகாரி லியோனெல் பாலகல்லேயும், கருணாவும்அடிக்கடி சந்திக்கிறார்கள். எதிர்காலத்தில் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா செயல்படவும்வாய்ப்புள்ளது என்றார்.
கரிகாலனின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர்கோடி டெய்லர் மறுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார்.
கருணா மீது தாக்குதல்?
இதற்கிடையே கருணா தரப்பினர் வாழும் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். தங்கள் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர் என்றுகருணா ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கிழக்குப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications