சதி நடக்கிறது: ஸ்ரீரங்கம் சுவாமிகள்
காஞ்சிபுரம்:
திருமலை திருப்பதி கோவில் விவகாரத்தில் தலையிட காஞ்சி மடாதிபதிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் கூறினார்.
தமிழகத்தின் பிரசித்து பெற்ற ஐந்து வைணவத் திருத்தலங்களின் மடாதிபதிகள் காஞ்சி சங்கராச்சாரியாருக்குஎதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இப்போது ஆண்டவன் சுவாமிகளும் அவருக்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
திருமலையில் வைகாசன ஆகம முறைப்படியே வழிபாடுகள் நடக்கின்றன. அது ஒரு வைஷ்ணவ ஆலயம். அதில்எப்படி காஞ்சி மடாதிபதியான சங்கராச்சாரியார் தலையிடலாம்?. அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஆதி காலத்தில் திருப்பதியில் மூலவராக இருந்தது சைவக் கடவுளான சுப்பிரமணிய சுவாமி தான் என்று தவறானதகவல் பரப்படுகிறது. அங்கு எப்போதும் மூலஸ்தானத்தில் இருப்பது வேங்கடாஜலபதி தான்.
திருமலைக் கோவிலை சைவக் கோவிலாக திரிக்கவும், அதை தன் வசம் எடுக்கவும் சிலர் (சங்கராச்சாரியார்) சதிசெய்து வருகின்றனர் என்றார் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள்.












Click it and Unblock the Notifications