For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பு.தா.இளங்கோவன் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க பா.ம.க. முடிவு

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

பா.ஜ.க. சார்பில் பு.தா. இளங்கோவன் போட்டியிடுவது சட்டப்படி செல்லாது என்பதை சுட்டிக்காட்டி தேர்தல்ஆணையத்திடம் புகார் கொடுக்க பா.ம.க. முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பு.தா.இளங்கோவனை பா.ம.கவிலிருந்து இன்னும் நாங்கள்நீக்க வில்லை. அவரும் ராஜினாமா செய்யவில்லை.

கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 91வது அரசியல் சட்டத் திருத்தத்தின் பஐகட்சி மாறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கட்சிகள் சீட் கொடுக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தம் கொண்டு வந்த பா.ஜ.கவே இப்போது அதை மீறியுள்ளது. பா.ஜ.கவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்ந்து சீட் கொடுத்துதேர்தல் செலவுகளையும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தது போல், வேறு கட்சிகள் செய்ததுண்டா? இப்போதுசீட் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியில் குழப்பத்தை உண்டாக்குகிறார்.

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறும் இளங்கோவனுக்கு டெபாஸிட் கிடைத்தாலேஆச்சரியம்தான் என்று கூறினார் ஜி.கே.மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X