பாண்டிச்சேரி: அரை நிர்வாணமாய் வந்த பா.ஜ.க. எம்எல்ஏ
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பாண்டிச்சேரி சட்டசபையின் 2 நாள் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது முதல்வர் ரங்கசாமிவரும் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ரூ. 430 கோடிமதிப்பில் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடல் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி சட்டை போடாமல் அரைநிர்வாணமாய் வந்திருந்தார். அதேபோல, அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.
இவர்களுக்கு சபாநாயகர் ராமச்சந்திரன் கண்டனம் தெவித்தார். சபையின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்தில் 3பேரும் நடந்து கொள்வதாக அவர் கூறினார்.
பின்னர் சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறியது. மறைந்த புதுவை துணை நிலை ஆளுநர் மல்கானி, மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன,
பின்னர் அவை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications