தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சேஷன்
பெங்களூர்:
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்டி.என்.சேஷன் கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி போதுமானதா என்ற தலைப்பில் பெங்களூரில் நடந்த கருத்தரங்கில் சேஷன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேஷன்,
இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது என்பது உலகுக்குத் தெரியும். ஆனால் இந்த வளர்ச்சி வீதம் போதுமானதா?அரசாங்கத்தின் மூலம் நாட்டை முன்னேற்ற விரும்பினால், ஜனநாயகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டும்.ஜனநாயகத்தின் மீது வாக்காளர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால்தான், ஜனநாயகத்தை சிறப்பானதாக்கமுடியும்.
படிப்பறிவு இல்லாதவர்கள் ஏராளமானோர் இருந்தாலும், நமது நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு நல்ல முறையில்நடக்கிறது. நமது கல்வி முறை மாணவர்களிடம் சிந்தனா சக்தியைத் தூண்டுவதில்லை. வெறும் குமாஸ்தாக்களைஉருவாக்கும் கல்வி முறையே நம்மிடம் உள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்தேர்தலுக்குப் போட்டியிடுவதில் தவறில்லை.
இந்த மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில் துணைப்பிரதமர் அத்வானியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சேஷன் போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது.