கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற வைகோ தேர்தல் உத்திகள் குறித்து விவாதம்செய்தார். அவருடன், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணனும் உடன்இருந்தார்.
திமுக கூட்டணியின் முக்கியப் பிரச்சார பீரங்கியாக உள்ள வைகோ இன்னும் தனது தீவிரப் பிரச்சாரத்தைத்தொடங்காத நிலையில், தேர்தல் பிரச்சாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், அரசியல் கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டு வருகிறார்ஜெயலலிதா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து மிகவும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். இதன் மூலம்அவரது தகுதி தெரிய வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் சோனியா காந்தி. அவர் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டால் மதிமுக அந்த முடிவை ஆதரிக்கும்.
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கவில்லை. மாறாகவாஜ்பாயை முன்னிருத்தியே ஓட்டு கேட்கிறார். அவரது ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை, வேதனைகள்தான்அதிகம் என்பதையே இது காட்டுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications