இலங்கை ராணுவத்துக்கு பாலசிங்கம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்த இலங்கை ராணுவமும், சில அரசியல் கட்சிகளும் முயற்சிசெய்து வருகின்றன என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் குற்றம் சாட்டினார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

கருணா மூலம் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த இலங்கை ராணுவமும், சில அரசியல் கட்சிகளும் முயற்சிசெய்து வருகின்றன. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதுடன் கடுமையான பின்விளைவுகளும்ஏற்படும். எனவே பிளவு ஏற்படுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம்.

எந்த மோதலும் இன்றி கருணா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அவர் மீது எத்தகைய நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதை இப்போது கூற இயலாது. தமிழர் பகுதியில் மீண்டும் போர் ஏற்படுவதை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை.

புலிகளின் இந்த உள் விவகாரத்தில் வேறு யாரும் தலையிட வேண்டாம். தேர்தல் முடிந்ததும் அரசுக்கும்எங்களுக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்புகிறோம். இந்தத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டணி வேட்பாளர்கள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றார்.

இயக்கத்தில் பிளவை ஏற்படுத்த முயல்வதாக அமெரிக்கா மீதும் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+